search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் பிரச்சனை"

    விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி ஒன்றும் தெரியாமல், அவர்களது பெயரில் அரசியல் செய்து வருகிறார் ராகுல் காந்தி என பாஜக எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். #VirendraSinghMast #FormersIssues #RahulGandhi
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பாதோஹி தொகுதி பாஜக எம்பியாக இருந்து வருபவர் வீரேந்திர சிங் மஸ்த். இவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு செடிகளின் வகைகல் பற்றியே ஒன்றும் தெரியாது. அவர் எப்படி விவசாயிகளின் பிரச்சனைகளை அறிவார்? 



    ராகுல் காந்தி விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி அறியாமல். அவர்களது பெயரால் அரசியல் செய்து வருகிறார். நமது நாட்டு விவசாயம் என்பது புத்தகத்தை படித்து தெரிந்து கொள்வதன் மூலம் வருவதல்ல.

    இந்தாண்டு பட்ஜெட்டில் முதல் முறையாக வேளாண் துறைக்காக 52 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சியே அமையும். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராவார் என தெரிவித்துள்ளார். #VirendraSinghMast #FormersIssues #RahulGandhi
    விவசாயிகள் பிரச்சனைக்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் துணை நிற்பதில்லை என அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தடைசெய்யக்கோரி மார்ச் 1-ந் தேதி முதல் 100 நாட்கள் குமரிமுதல் கோட்டை வரை 32 மாவட்டங்கள் வழியாக விவசாயிகள் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் எண்ணத்தூர், உத்திரமேரூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட அவர் காஞ்சீபுரம் வந்தார்.

    பின்னர் அய்யாக்கண்ணு மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து பாலாற்றில் 3 கிலோ மீட்டருக்கு ஒன்று என தடுப்பணை கள் கட்ட வேண்டும், மாவட் டத்தில் உள்ள அனைத்து சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

    அப்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. காலம்காலமாக அரசியல் வாதிகள் விவசாயிகளை அடிமை போல் வைத்துள்ளனர்.

    அ.தி.மு.க, தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி என எந்த ஒரு அரசியல் கட்சியும் விவசாயிகளுக்காக துணை நிற்கவில்லை.

    மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு திட்டத்திற்காகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த விட மாட்டோம். மீறி கையகப்படுத்தினால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்.

    நடிகர் ரஜினிகாந்த் நதிகள் இணைப்பிற்காக தருவேன் என்று சொன்ன 1 கோடி ரூபாயை என்னிடமோ அல்லது மத்திய அரசிடமோ இதுவரை தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அய்யாக்கண்ணு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவருடன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைபொதுச் செயலாளர் தீனன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். #Tamilnews
    ×